கேரளா கோழிக்கோடு அருகே இரு தினங்களுக்கு முன், ஷிம்ஜிதா என்ற பெண் பேருந்தில் பயணிக்கும்போது தன்னை அநாகரிகமாக ஓரு நபர் தொட்டுவிட்டார் என்று அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்து, ரீல்ஸ் மோகத்ததுக்காகவும், பயனர்களை கவரவும் அந்த நபரின் குணத்தை கேவலபடுத்தி, அவர் மீது வெறுப்பேற்றும் விதமாக பேசி இன்ஸ்டாவில் பதிவு போட அது வைரலாகியது.
பேருந்தில் கூட்ட நெரிசலில் அறிந்தோ அறியாமலோ செய்த ஒரு தவறுக்காக, அந்த பெண் சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த வீடியோவால் 37 வயதான தீபக் என்ற அந்த நபரை உறவினர்கள், அண்டை வீட்டார்கள், அக்கம்பக்கத்தினர்கள், வேலை பணியாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினர்களும் கீழ்த்தரமாக கமெண்ட்டுகளை போட்டுள்ளனர்
தன்னை அறியாமல் நடந்த சம்பவத்தால் அவமானமும், கவலையும், மன உளச்சலும் கொண்ட தீபக், தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
ஷிம்ஜிதாவின் ரீல்ஸ் பொறிக்கு இரையான தீபக்கின் மரணத்திற்கு நியாயம் கேட்டு, பலதரப்பினர்களும் கடும் கண்டனமும், போர்கொடி தூக்கி வருகின்றனர்.
பேருந்தில் பெண்ணை உரசினால் மீண்டும் உரசாதவாறு நீங்கியிருக்க முடியும், அல்லது அந்த இடத்திலே கண்டிக்கவும் முடியும்.. ஆனால் வீடியோ மூலம் பிரபலம் ஆகவேண்டும் என அந்த பெண் இப்படி செய்துள்ளார் என எதிர் விமர்சனங்களும் வருகின்றன.
உண்மையில் அந்த வீடியோவில் ஷிம்ஜிதா வேண்டுமென்றே தீபக்கின் அருகில் ஒட்டி நிற்பது போலவும், ஒரு சாதாரண மனிதனை உசுப்பேற்றி நெருங்கி நின்று, அதன் பிறகு நடக்கும் நிகழ்வை அவருக்கே தெரியாமல் படம்பிடித்தது போலவும், பாலியல் சீண்டல் செய்த குற்றவாளி என கேவலபடுத்தி பேசி சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பி சைபர் தாக்குதல் நடத்தியதன் விளைவு…
கண்ணியமான மனிதராக நடப்பவர் என ஊர் மக்களால் கூறுப்படும் தீபக், தன் மீது இப்படியொரு அவதூறு பரவுவதை தாங்க இயலாமல், தான் நிரபராதி குற்றமற்றவன் என்னை நம்புங்கள் என தனது உயிரை மாய்த்து கொண்டார்

இதற்கு காரணமான ரீல்ஸ் வெறி ஷிம்ஜிதாவை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்தே தீருவேன் என பெண் வழக்கறிஞர் ஃபவுஸி ஹபீப் கூறியுள்ளார்.
சட்டம் ,கோர்ட், காவல்துறை இதெல்லாம் சும்மா என்று நினைக்க வேண்டாம்.
சட்டத்தின் அனைத்து ஆதரவும் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் தான் என பெண் வழக்கறிஞர் ஃபவுஸி ஹபீப் களமிறங்கியுள்ளார்.

