பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டின் மிக முக்கியமான திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் தை 1 பிறக்க உள்ளதால் பொதுமக்கள் கொண்டாட தயாராக உள்ளனர்.
இந்த நிலையில் வருடா வருடம், பொங்கல் விடுமுறையில் மட்டும் டாஸ்மாக் மதுபானக் கடை வசூல் அதிகமாகும். அதே போல இந்த முறையும் விடுமுறையை கொண்டாட மதுப்பிரியர்கள் மதுவை வாங்க முனைப்பு காட்டி வருகின்றனர்.
இதனிடையே கோவை டாஸ்மாக் மதுபான கடைகளில் காலாவதியான மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கோயம்புத்தூரில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, தேதி காலாவதியான மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு திமுக அரசு வைத்திருப்பதாக @NewIndianXpress நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் உயிர், உடல்நலம், குறித்து சிறிதளவும் அக்கறை இல்லாமல், வருமானம் வந்தால் போதும் என்ற ஒரே நோக்கம் கொண்ட திமுக அரசின் இந்தச் செயல்பாடு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மது விற்பனை மூலமாக பல ஆயிரக்கணக்கான கோடிகள் வருவாய் ஈட்டும் திமுக அரசு, குறைந்தபட்சம், விற்பனை செய்யும் மதுவின் தரத்தைக் கூடப் பாதுகாக்கத் தவறுவது, திட்டமிட்ட குற்றம்.
கோயம்புத்தூரில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, தேதி காலாவதியான மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு திமுக அரசு வைத்திருப்பதாக @NewIndianXpress நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் உயிர், உடல்நலம், குறித்து சிறிதளவும் அக்கறை இல்லாமல், வருமானம் வந்தால் போதும் என்ற ஒரே… pic.twitter.com/uuDYk85usQ
— K.Annamalai (@annamalai_k) January 13, 2026
காலாவதியான மதுவை விற்பதால் பாதிக்கப்படுவது முதலமைச்சர் திரு ஸ்டாலின் குடும்பமோ, அல்லது திமுக அமைச்சர்கள் குடும்பமோ அல்ல, அப்பாவி பொதுமக்களும், அவர்களது குடும்பங்களும் மட்டுமே. பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட முதலமைச்சருக்கு அருவருப்பாக இல்லையா? என விமர்சித்துள்ளார்.

