விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் அவரின் கடைசி படம் என கூறப்படுகிறது. அரசியலில் குதித்துள்ளதால் அவர் எடுத்த இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடைசி படம் என்பதால் மாஸ் வரவேற்பை கொடுக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி 9ஆம் தேதி வெளியாகவில்லை.
தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் பெரும் பிரச்சனையை சந்தித்து வருகிறது படக்குழு. ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட விஜய் பேசவில்லை.
உயர்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி பிடி ஆஷா, படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால் இதை எதிர்த்து தணிக்கை வாரியம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது

விசாரணயில், இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி பிடி ஆஷா பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர். இதனால் ஜனநாயகன் மீண்டும் தள்ளிப்போனது.
இரு நீதிபதிகள் உத்தரவை எதிர்த்து ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளதால் வழக்கு நாளை (13.01.26) விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது,

