தென்னிந்தியாவில் பொங்கல், சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான புதிய படங்கள் அந்தந்த மொழிகளில் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் தெலுங்கில் வெளியான படம் தான் மான ஷங்கரா வரப் பிரசாத் காரு. சிரஞ்சீவி, வெங்கடேஷ், நயன்தாரா, கேத்தரின் தெரசா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானி இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார்.
இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு தியேட்டரில் டிக்கெட் எடுத்து பார்த்தனர். ஐதராபாத்தில் உள்ள Kukatpally என்ற பகுதியில் உள்ள அர்ஜூன் தியேட்டரில் படம் பார்த்த ரசிகர் திடீரென உயிரிழந்துள்ளார்.

ஆனந்தகுமார் என்ற அந்த நபர்,தியேட்டரில் படம் பார்த்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

