விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் அவரின் கடைசி படம் என கூறப்படுகிறது. அரசியலில் குதித்துள்ளதால் அவர் எடுத்த இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடைசி படம் என்பதால் மாஸ் வரவேற்பை கொடுக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி 9ஆம் தேதியான நேற்று வெளியாகவில்லை.
தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் பெரும் பிரச்சனையை சந்தித்து வருகிறது படக்குழு. ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட விஜய் பேசவில்லை. நீதிமன்றமும் படத்தை வெளியிட தடை விதித்துள்ளதால், தணிக்கை வாரியத்தின் வாதம் பொறுத்தே வரும் திங்கட்கிழமை முடிவு தெரியவரும் என கூறப்படுகிறது
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான கே வெங்கட்நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டிசம்பர் மாதமே படத்த தணிக்கை குழுவுக்கு அனுப்பி அவர்கள் சொன்ன திருத்தங்களை செய்து மீண்டும் சமர்பித்தோம்.
யுஏ சான்றிதழ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பட வேலைகளை பார்த்து கொண்டிருந்த போது ஜனவரி 5ஆம் தேதி மாலை படத்தை மறு ஆய்வு கமிட்டிக்கு அனுப்பவுள்ளதாக அதிர்ச்சி செய்தி வந்தது.
மறு ஆய்வு கமிட்டிக்கு செல்ல நேரம் இல்லாததாலும், புகார் தெரிவித்தது யார் என்றே தெரியாததாலும் உடனடியாக நீதிமன்றம் சென்றோம், நீதிமன்றம் சான்றிதழ் கொடுக்க உத்தவிட்ட போதும், தணிக்கை வாரியம் உடனே மேல்முறையீட்டுக்கு சென்று இடைக்கால தடை வந்துவிட்டது.
— KVN Productions (@KvnProductions) January 9, 2026
ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், சொன்ன தேதியில் படத்தை கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம், ஆனால் எங்கள் கையில் இல்லாத விஷயத்தால் முடியாமல் போனது என வெங்கட் நாராயணா கூறியுள்ளார்.

