பிக்பாஸ் தமிழ் சீசன் 9 களைகட்டி வருகிறது. 95 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசனில் இந்த முறை 6 போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் உள்ளனர். இன்னும் 5 நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வரப் போகிறது.
இதில் கானா வினோத் தான் வெற்றியாளர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்த நிலையில், பணப் பெட்டி டாஸ்க்கில் கானா வினோத் வெளியேறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது.
இறுதியாக உள்ள சபரி, அரோரா, விக்ரம், சாண்ட்ரா, திவ்யா என 5 பேரில் யார் வெற்றியாளர் என்பதை காண இன்றும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். கானா வினோத்துக்கு அதிக ஆதரவு இருந்தும் அவர் ஏன் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டார் என அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ஆனால் பொருளாதார ரீதியாக சபரி மற்றும் சாண்ட்ரா உள்ளதால், வினோத் இவ்வாறு செய்திருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். கானா வினோத் எடுத்து சென்ற பணம் ரூ.18 லட்சம்.
அதே சமயம் அவர் 95 நாட்கள் வீட்டில் இருந்ததால் அவருடைய சம்பளம் ஒரு நாளைக்கு ரூ.29 ஆயிரம் என்ற வீதத்தில் ரூ.27 லட்சத்து 55 ஆயிரம் என்றும், மொத்தமாக ரூ.45 லட்சம் வரும் என கூறப்படுகிறது. பண விவரப்படி, வினோத் செய்தது சரிதான் என ஒரு சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

