கோவை மாவட்டம் கோவை புதூரை சேர்ந்த விமல் ராஜ் மற்றும் அவருடன் பணிபுரியும் நண்பர்களான முரளி மற்றும் ஆகாஷ் காரில் திருமலையாம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தனியார் இரும்பு ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரம் இருந்த இரும்பு குழாயில் கார் அதிவேகமாக வந்து மோதியதாக தெரிகிறது.
இந்த விபத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது காரை ஓட்டிய ஆகாஷ் மற்றும் காரின் பின்னால் இருந்த முரளி ஆகியோர் காரில் இருந்து இறங்கி தப்பினர்.

இடது பக்க முன்னிருக்கையில் அமர்ந்திருந்த விமல்ராஜ் வெளியே வர முடியாமல் தீப்பிடித்த காருக்குள்ளேயே சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

