கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷ் அவருடைய மனைவி ஷைனி, கண்ணன், அனூப், வீரமணி உள்ளிட்டு 5 பேரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது கேரளாவில் பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளன. சதி திட்டம் தீட்டியதாக இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து கேரளா சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட ரூபேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதே போல் சைனி, அனூப், வீரமணி, கண்ணன் ஆகியோரும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி விஜயா வழக்கு விசாரணை அடுத்த மாதம் மூன்றாம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

