பல திறமையாளர்களை வெளிகொண்டு வந்த நிகழ்ச்சி சரிகமப. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமா சீசன் 5ல் கோவையை சேர்ந்த போட்டியாளர் சுஷாந்திகா டைட்டில் வின்னரானார்.
இந்த நிகழ்ச்சியில் பலரையும் தனது குரலால் கவர்ந்தவர் பவித்ரா. கணவனை இழந்து தனது மகளை வளர்த்து வரும் பவித்ராவின் சொந்தக் கதை சோகக்கதையே. அதையெல்லாம் தாண்டி தனது வாழ்வின் ஒட்டுமொத்த கனவை வெல்ல வேண்டும் என இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற பவித்ரா, அஞ்சு வண்ண பூவே பாடலை பாடி மிகவும் பிரபலமானார். ஏழ்மையான பவித்ராவுக்கு இந்த நிகழ்ச்சி அவரது மகளுக்கு பல உதவிகள் வந்தன. தற்போது பவித்ரா வெள்ளித்திரையில் ஒரு பாடலை பாட உள்ளார்.
டி இமான் அவருக்கான வாய்ப்பை கொடுத்துள்ளார். விரைவில் என்ன படம். என்ன பாடல் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளது.

