கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் த.வெ.க கொங்கு மண்டல பொறுப்பாளர் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று மேட்டுப்பாளையம் வந்திருந்தார்.
இந்நிலையில் அதில் ஒரு நிகழ்ச்சியாக பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க உள்ளதாக தகவல் வந்தது.
இந்நிலையில் உரிய முன் அனுமதி பெறவில்லை என்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அண்ணா சிலையை சுற்றியுள்ள கம்பி க் கூண்டிற்கு பூட்டு போட்டு பூட்டப்பட்டது. இதை அடுத்து செங்கோட்டையன் பூட்டப்பட்ட அண்ணா சிலைக்கு முன்பாக இருந்து உரையாற்றினார்.
அப்பொழுது அண்ணாவின் பெயரைச் சொல்லி கட்சியும் ஆட்சியும் நடத்தும் இரண்டு கட்சிகளுமே அண்ணாவை தாங்கி பிடிக்க மறுக்கிறார்கள்.

ஆனால் எங்களது த.வெ.க தொண்டர்கள் அண்ணாவின் உருவப்படத்தை தாங்கி பிடித்து உள்ளார்கள் என்று கூறினார்.

மேலும் ஒரு திரைப்படத்திற்கு ரூ.250 கோடி சம்பளம் வாங்கும் விஜய் நான்கு படங்களை கணக்கிட்டால் ரூபாய் ஆயிரம் கோடி வரும் என்றும் இதை புறந்தள்ளி மக்கள் சேவைக்காக வந்துள்ளதாகவும் வரும் 2030ல் விஜய் அவர்கள் நிரந்தர முதலமைச்சராக ஆவார் என்றும் கூறினார்.

