பிக்பாஸ் தமிழ் 9வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட 90 நாட்களை எட்டியுள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வாக்குவாதம், மோதல், சர்ச்சைகளால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மற்றும் நாளை வார இறுதி நாட்கள் என்பதால் விஜய் சேதுபதி எவிக்சன் பிராசஸ் அறிவிப்பார் என்பது அனைவரும் தெரிந்ததே.
ஆனால் கம்ருதீன் மற்றும் பார்வதியை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று நேற்று முதல் சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள் விழுகின்றன.
காரணம் நேற்று நடந்த கார் டாஸ்கில், சாண்ட்ராவை கேவலமான வார்த்தைகளால், கம்ருதீன் மற்றும் பார்வதி பேசியது, சாண்ட்ராவை எட்டி உதைத்து காரில் இருந்து தள்ளிவிட்டது போன்றவை காரணமாக உள்ளது.
கடைசி வரை காரில் இருப்பவர்கள் டிக்கெட் டூ ஃபைனலை வெல்வார்கள் என்பதால், போட்டியாளர்களிடையே மோதல் இருந்தது. அதே சமயம் ஒருவர் ஒருவரை தள்ளி இழுத்து, மோதியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
காருக்குள் இருந்த சாண்ட்ராவை பார்வதி, கம்ருதீன் எட்டி உதைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கம்ருதீன் மோசமான வார்த்தைகளால் பேசியது, நிகழ்ச்சியை பார்த்த பார்வையாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Did this scumbag assh*le #Kamruddin hit #Sandra with Leg😡😡😡@VijaySethuOffl@vijaytelevision so in the name of task u wil encourage tis kind of Physically hitting someone with legs?tat too a female🤷#BiggBossTamil9 pic.twitter.com/yHWGzsiZPd
— pradeep (@poloprad) January 2, 2026
கம்ருதீன் மற்றும் பார்வதியை சமூகவலைதளங்களில் ரசிகர்கள், நெட்டிசன்கள் கடுமையாக திட்டி வரும் வேளையில், சாண்ட்ராவின் கணவரும், முன்னாள் போட்டியாளருமான பிரஜின், தனது ஆவேசத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.
நான் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் போகிறேன், அப்படி நான் உள்ளே போகும் போது கம்ருதீன் இருந்தால் அவருக்கு கெட்ட நேரம், இல்லாவிட்டால் அது நல்ல நேரம், இது ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கலாம் என கூறியுள்ளார்.
பிரஜின் கருத்துக்கும் ரசிகர்கள் ஆதரவு கூறினாலும், இன்னொரு மோதல் தேவையா என்பதையும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

