திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் திடீரென நடந்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்தது. ராஜகோபுரத்தின் மீது ஏறிய ஒருவர் தங்கக் கலசத்தை சேதப்படுத்தியதால், கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பு நிலவியது.
கீழே இறங்க மறுத்த அந்த நபர், “மது வாங்கித் தராவிட்டால் இறங்க மாட்டேன்” என கூறி முரண்டு பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கோவில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் கடும் பதற்றம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த திருப்பதி போலீஸார், சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குடிபோதையில் இருந்த அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டவர் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த குட்டாடி திருப்பதி என தெரியவந்தது.

