கரூர் குளித்தலை அருகே கழுவூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் இருசக்கர வாகனத்தில் சுற்றிக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காணாமல்போன மகளை பெற்றோர் தேடி வந்த நிலையில், அந்த நபர் சிறுமியை அதே பகுதிக்கு அழைத்து வந்து விட்டுச் செல்ல முயன்றுள்ளார். இதைக் கவனித்த பொதுமக்கள், அவரை பிடித்து தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

