ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்த பெண் பயணியை, ரெயில்வே ஊழியர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.
தென்னிந்திய ரெயில்வே வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த 20ஆம் தேதி தாம்பரத்தில் கடற்கரை நோக்கிச் புறநகர் ரெயில் சென்றது.
அப்போது ரயிலில் ஏறும் போது தவறி விழுந்த பெண் பயணியை, டிக்கெட் பரிசோதனை ஊழியரான நிதிஷ் குமார் உடனடியாக செயல்பட்டு பாதுகாப்பாக காப்பாற்றினார்.
Swift alertness by Shri Nithish Kumar, Ticket Checking Staff (CCTC/TBM), at Tambaram on 20.12.2025, saved a lady passenger who accidentally slipped while boarding a Beach-bound train.
— Southern Railway (@GMSRailway) December 22, 2025
His timely action and presence of mind averted a serious accident, reflecting exemplary… pic.twitter.com/qRhNsgLcrA
அவரது துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் அவரது கடமை உணர்வையும் பயணிகளின் பாதுகாப்பு மீதான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாகவும் தென்னிந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

