கோவைக்கு தேர்தல் அறிக்கை குழு இங்குள்ள நிர்வாகிகளிடம் கலந்து பேசி தேதியை முடிவு செய்துவிட்டு நிச்சயம் இங்கு இருக்கக்கூடிய தொழில்துறையினர் விவசாயிகள் என பல்வேறுபட்ட தரப்பினருடைய கருத்துக்களை கேட்டுத்தான் தயார் செய்யப்படும்.
மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை சொல்லக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது முதலமைச்சர் அறிவுரை. எனவே நிச்சயமாக கோவைக்கு வரும்போது அத்தனை தரப்பு மக்களையும் சந்திப்போம்.
உறுதியாக இங்கு இருக்க கூடிய தொழில் முனைவோரையும் சந்திப்போம் மக்களுடைய தேவை என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டு எதையெல்லாம் செய்ய முடியுமோ அதை வாக்குறுதிகளாக தேர்தல் அறிக்கையாக உருவாக்க முடிவு செய்திருக்கிறோம். எனவே எண்ணிக்கை என்பதெல்லாம் கணக்கு கிடையாது.
பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆற்காடு நவாப் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நேரங்களில் பல பொய்யான விமர்சனங்களை பலர் வைப்பார்கள்.
அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது உண்மையான நிலவரம் என்ன என்பது இங்கு இருக்கக்கூடிய ஊடகத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் தெரியும்.
மகளிர் வாக்கு மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் தவெக விற்கு போகும் என கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,யாருக்கு என்ன வாக்குகள் எப்படி போகும் என்பது தேர்தல் முடியும் போது தெளிவாக தெரியும் நாங்கள் நிச்சயமாக உறுதியாக இருக்கிறோம்.
அடுத்த முறையும் திராவிட மாடல் ஆட்சி அமையும் முதலமைச்சர் இரண்டாவது முறையாக முதலமைச்சராக தொடர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

