நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக உள்ளார். சமீபத்தில் பாலிவுட் இயக்குநர் ராஜ் உடன் கோவை ஈஷா மையத்தில் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த கடை திறப்பு விழாவில் பங்கேற்க சென்ற சமந்தா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். ஏராளமான ரசிகர்கள் ஒன்று திரண்டதால், நெரிசலில் சிக்கிய சமந்தாவை பாதுகாவலர்கள் படாதபாடு பட்டு காரில் ஏற்றி விட்டனர்.
சமீபத்தில் நடிகை நிதி அகர்வால் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்று திரும்பும் போது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
Apudu Niddhi,ipudu Samantha!Entra idhi pic.twitter.com/XdKH3GB72F
— Aryan (@Pokeamole_) December 21, 2025
நடிகை நிதி அகர்வாலிடம் தவறாக நடந்து கெண்டவர்கள் மீது நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே நடிகை சமந்தாவும் கூட்ட நெரிசலில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா கூட்ட நெரிசலில் சிக்கிய வீடியோ வைரலாகி வருகிறது

