கோவை மாவட்ட, கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் பவன் குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மதுக்களை வாங்கிக் கொண்டு இருந்தனர்.
கலெக்டர் அலுவலகத்திற்கு நுழைவு வாயில் வழியாக வரும் பொது மக்களை போலீசார் சோதனை செய்த பிறகு உள்ளே அனுப்பிக் கொண்டு இருந்தனர்.அப்போது நுழைவாயில் அருகில் திடீரென்று, ஒரு தம்பதி தலையில் மண்ணென்னையை ஊற்றிக் கொண்டு தீப்பெட்டியை எடுத்து பற்ற வைக்க முயன்றனர்.
இதை அங்கு பாதுகாப்புக்கு நின்ற சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பார்த்த அதிர்ச்சி அடைந்தனர். உடனே பாய்ந்து சென்று அவர் கையில் வைத்து இருந்த தீப்பெட்டியை போலீசார் பறித்தனர்.
அப்போது அந்த தம்பதி தங்கள் ஊர் ஆலாந்துறை அருகே உள்ள கீழ கவுண்டன்பாளையம், என்றும் அவர்கள் பெயர் வெங்கடாசலம், நாகமணி என்று தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் வசிக்கும் வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்ட முயற்சிக்கும் போது சிலர் பிரச்சனை செய்வதாகவும், எனவே நத்தம் புறம்போக்கு என்று தங்கள் இடத்தை வரைபடத்தில் மாற்றம் செய்து அறிக்கை தரும்படி கேட்டு மனு கொடுக்க வந்ததாகவும், சிலர் செய்யும் பிரச்சினையால் தாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி கண்ணீர் வடித்தனர். அதன் பிறகு போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

