டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் இன்று வெளியானது. இதில் முக்கிய நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மன் கில் இடம்பெறவில்லை.
இதுகுறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ஷுப்மான் கில் மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்படவில்லை என சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்தார்.

அணியின் ஒருங்கிணைப்பு தேவைகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். டாப் ஆர்டரில் ஒரு விக்கெட் கீப்பர் தேவைப்பட்டதால் இந்த மாற்றம் செய்யப்பட்டது என்றும், இது கில்லின் ஃபார்முடன் தொடர்புடையது அல்ல என்றும் அவர் கூறினார்.
கில்லின் திறமை குறித்து எந்த சந்தேகமும் இல்லை; அவர் ஒரு சிறந்த வீரர் என்றும் சூர்யகுமார் வலியுறுத்தினார். அணியின் சமநிலைக்காக ரிங்கு சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அணிக்குள் நெகிழ்வுத்தன்மையை உருவாக்க பல விருப்பங்களை திறந்து வைத்திருப்பது அவசியம் என கூறிய சூர்யகுமார், அதற்காகவே இந்த அணித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

