கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு அவரது மகன் சண்முக பாண்டியன் தொடர்ச்சியாக சில படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் அவர் பேர் சொல்லும்படி எந்த படமும் அமையவில்லை. இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குநர் பொன்ராம் உருவாக்கிய படம் கொம்புசீவி.
சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்க, நாட்டாமை டீச்சர் ராணியின் மகள் தரணிகா நாயகியாக நடித்துள்ளார். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நேற்று கொம்புசீவி படம் உலகமெங்கும் வெளியானது. படத்தின் முதல் நாளே பாசிட்டிவ் ரிவ்யூஸ் வந்துள்ளது படக்குழுவை உற்சாகப்படுத்தியுள்ளது. மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் உண்மை கதை தழுவியது.
நல்ல விமர்சனங்களுடன் இந்த படம் வெளியாகியுள்ள நிலையில் முதல் நாளே ரூ.40 லட்சம் வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

