கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பாக தலைவர் தளபதி விஜய் எஸ்.ஐ.ஆர் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பொருத்தமானதாகவே இருக்கும் என தெரிவித்தார்.
அமைச்சர் சேகர்பாபு கூறிய “தவெக தவழும் குழந்தை” என்ற கருத்து தொடர்பாக அவர் கூறுகையில், “தவழும் குழந்தைதான் பின்னாளில் பெரியவராக வளர்வார்கள். பெரியவரான பிறகே தன்னாட்சி நடத்துவார்கள். அது வாழ்க்கையில் இயல்பாக எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான்” என்றார்.
மேலும், தமிழிசை சவுந்தரராஜனின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், “அது அப்படிப்பட்ட கருத்துதான். களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுதான் தீர்ப்பளிக்கும்” என கூறினார்.
அடுத்த பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் குறித்து, “தலைவரிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும்“எங்களைப் பொறுத்தவரை பொங்கல் முடிந்ததற்குப் பிறகு எங்களுடைய திருப்புமுனை எப்படி அமைந்திருக்கிறது என்பதைப் பார்த்து நாடே வியக்கும்” என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

