தளபதி விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் குதித்துள்ளார். இவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில் விஜய் மகனை வைத்து படத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார். நடிகை தேவயானியின் கணவரும் இயக்குநருமான ராஜகுமாரன், தற்போது ட்ரோல் மெட்டீரியலாக வலம் வருகிறார்.
சமீபத்தில் இவர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மகேந்திரன் குறித்து அளித்த பேட்டி சர்ச்சையானது. இது குறித்து அவர் விளக்கமளித்தாலும், விளம்பரத்திற்காக ராஜகுமாரன் இவ்வாறு செய்வதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
தேவயானி தன்னுடன் வரும் போது வெறும் கையை மட்டுமே வீசி வந்ததாக தனது சொந்த மனைவியை விமர்சித்திருந்தார். பட வாய்ப்பில்லாத ராஜகுமாரன், தன்னை விளம்பரப்படுத்த இப்படி செய்கிறாரா என தெரியவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ராஜகுமாரன் அளித்த பேட்டியில், நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாகவும் விஜய் மகன் ஜேசன் தான் ஹீரோ, எனது மகள் இனியா தான் கதாநாயகி என கூறியுள்ளார். விஜய் தன்னுடைய இயக்கத்தில் நடிக்காவிட்டாலும், அவரது மகனை வைத்து படம் இயக்க உள்ளதாகவும், முதல் பாகத்திற்கு தொடர்புடையது என்பதால் தேவயானியும் இதில் நடிப்பார் என கூறியுள்ளார்.

ராஜகுமாரன் தேவயானி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்,. மூத்த மகள் பெரியதாக வெளியில் தெரியாமல் இருந்தாலும், இளையமகள் இனியா, ரியாலிட்டி ஷோவில் கலந்து புகழ்பெற்றார். சமீபத்தில் இவருக்கு தனியார் ஊடகம் சார்பில் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

