சின்மயி என்றாலே சர்ச்சை என்று தான் பொருள் போல… அந்தளவுக்கு இவரை சுற்றி சர்ச்சைகள் வெடித்து வருகிறது.
நேற்று தி ராஜா சாப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால், சிக்கிக கொண்ட அப்படத்தின் நடிகை நிதி அகர்வால், பவுன்சர்கள் உதவியுடன் காரில் புறப்பட்டு சென்றார்.
கடும் நெரிசலில் வந்த அவரை ரசிகர்கள் அத்துமீறினர், அவரிடம் சீண்டலில் ரசிகர்கள் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாடகி சின்மயி, தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
அதில், சில ஆண்களின் நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ள அவர், பெண்களை குறிவைத்து நடைபெறும் துன்புறுத்தல்களுக்கு எதிராக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த பதிவிற்கு சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகள் வெளிப்பட்டு வருகின்றன. சிலர் சின்மயியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பலர் அவரை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து வருகின்றனர்.
அதில் ஒருசிலர், ஒரு செலிப்ரிட்டி வந்தால் கூட்டம் கூடுவது இயல்புதான், அவரிடம் போட்டோ எடுக்க போட்டி போடுவது வழக்கம். ஆனால் நேற்று கூட்டம் அதிகமாக வந்ததால், கூட்டத்தில் ஒருவரையொருவர் முட்டிக் கொள்வது தள்ளுவது இயல்புதான், அது எப்படி துன்புறுத்தல் ஆகும். சின்மயி பதிவு அர்த்தமே இல்லாதது என்றும் கூறினார்

மற்றொருவர், ஆண்கள் மீது வெறுப்பு இருந்தால் நீங்கள் ஏன் உங்கள் கணவரை விவாகரத்து செய்யக்கூடாது என கூறியுள்ளார்.

