வில்லுப்பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராணி. மலையாளத்தில் தொடர்ந்து ஹிட் படம் கொடுத்த நடிகை ராணியை தமிழுக்கு அழைத்து வந்தவர் கங்கை அமரன்.
ராமராஜனுக்கு ஜோடியாக நடித்த ராணிக்கு தமிழில் பெரிய வாய்ப்பு அமையவில்லை. நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் கவர்ச்சி நடிகையாக மாறினார்.
ஐட்டம் டான்சராக மாறிய அவருக்கு ஒரு பாட்டுக்கு ஆட வாய்ப்பு குவிந்தது. ஜெமினி படத்தில் ஓ போடு பாட்டுக்கு விக்ரமுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருந்தார்.
சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வந்த அவர், கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி வந்தார். டீச்சராக தமிழ் மனதில் பதிந்துள்ள ராணி தனது மகளை சினிமாவில் களமிறக்கியுள்ளார்.

இயக்குநர் பொன்ராம் உருவாக்கும் கொம்பு சீவி படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் தார்னிகா. இந்த படத்தில் கேப்டனின் இளையமகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

